தூணிலும் துரும்பிலும் இருப்பான்
கனவிலும் நினைவிலும் வந்து
கார்மேகமாய் என்னை சூழ்ந்து
ஈரபதத்தை முத்தத்தில் கணக்கெடுப்பான்!!!
by - SV
நிலவுக்குள் இருள் படிந்ததினால் களங்கம் போல
ஒரு நொடி சிந்திக்காமல் செய்த தவறினால்
என் விடியல்களைஎல்லாம் எடுத்து சென்ற
காரிருளவனால் விடியாமுகம் ஆகிவிட்டேன்.
Saturday, May 5, 2012
மனதை நான் ரசித்தேன்
மாதை நீ ரசித்தாய்
பேதை நான் என்றேன்
போதை நீ என்றாய்
பந்தம் நான் என்றேன்
பதுமை நீ என்றாய்
நாதன் எனக்கு என்றேன்
தோலாள் நீ என்றாய்
கொடுத்த முத்தத்தின் விளைவு
உதட்டில் சின்னம் மனதில் நிறைவு.
கொடுக்காத முத்தத்தின் விளைவு
மனதில் எரிவு உதட்டில் எய்ப்பு. - SV